
யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணம் நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உணவகத்திற்கு பருத்தித்துறை புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த மாதம் 31ஆம் திகதி வந்து சென்றதன் அடிப்படையிலேயே இன்று காலையில் இருந்து குறித்த உணவகம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், உணவகத்தில் கடமையாற்றிய ஊழியர்கள் 11 பேரும் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது