மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்...!

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்...!

கணவனால் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் நேற்று கிளிநொச்சி - பூநகரி- தெல்லிக்கரை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவர் ஆவார்.

கணவன் - மனைவிக்கு இடையில் நடைபெற்ற வாக்குவாதத்தினாலேயே குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

மனைவியை கொலை செய்த குறித்த சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், மேல் விசாரணையை பூநகரி காவல்துறையினர் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.