
மனோவிடம் காவல்துறையினர் வாக்குமூலத்தை பதிவுசெய்தனர்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷனிடம் கொஹூவல காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டு சட்டத்தை மீறியதாக தெரிவித்தே அவரிடம் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இன்று(16) முற்பகல் தனது வீட்டிற்கு சென்ற இரண்டு காவற்துறையினர் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்