
அனைத்து நிறுவனங்களிலும் கொரோனா பரவல் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அனைத்து நிறுவனங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் ண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 474 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்திருந்தார்