
கொழும்பு நகர் பகுதியில் அதிகளவில் வளி மாசு
கொழும்பு நகர்ப் பகுதியில் தற்போது வளி அதிகளவில் மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி இதனை தெரிவித்தார்.
அத்துடன் கண்டி, குருநாகல் உள்ளிட்ட சில நகர் பகுதிகளிலும் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்