அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் மகிழுந்தில் பயணிக்கும் இளைஞர்கள் (காணொளி)

அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் மகிழுந்தில் பயணிக்கும் இளைஞர்கள் (காணொளி)

அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் சென்ற மகிழுந்தொன்று தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நீல நிற மகிழுந்து ஒன்றில் பயணிக்கும்  4 இளைஞர்கள் அதன் ஜன்னல் கண்ணாடிகளை தாழ்த்தி சரீரத்தை வாகனத்தின் வெளிப்புறத்தில் இருக்குமாறு  பாதுகாப்பற்ற முறையில் அமர்ந்து செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

வாகனமொன்றில் பயணிக்கும் போது இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றச் செயல் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாகனத்தின் உரிமையாளர்  வாகனத்தை பதிவு செய்யாமல் வேறொரு நபருக்கு வழங்கியுள்ளரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்