முகக்கவசத்தை அணியத் தவறிய தாய்லாந்து பிரதமருக்கு 190 அமெரிக்க டொலர் அபராதம்

முகக்கவசத்தை அணியத் தவறிய தாய்லாந்து பிரதமருக்கு 190 அமெரிக்க டொலர் அபராதம்

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் கட்டாயமாக்கப்பட்டுள்ள முகக்கவசத்தை அணியத் தவறியதற்கு தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஒச்சாவிற்கு (Prayuth Chan-ocha) 190 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கின் ஆளுநர் அஸ்வின் குவான்முவாங் (Aswin Kwanmuang) இதனை தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாத நிலையில், பிரதமரின் புகைப்படம் சமூக வலைத் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது