பெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய அஜித்

பெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கி உள்ளார்.

 

அஜித்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

 

இதனால் திரைப்பட தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்காக பெப்சி யூனியனுக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித். இதை பெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

 

அஜித்

 

ஏற்கனவே நடிகர் அஜித், கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.