
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்தியாவிலிருந்து 3 படகுகள்!
இரசாயன திரவியங்களுடன் கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்திய கடலோர காவல்படையினர் இரு படகுகளும், டக் படகு ஒன்று இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடலோர காவல்படையின் ஐசிஜி வைபவ், ஐசிஜி டோனியர் மற்றும் வோட்டர் லில்லி என்ற டக் படகும் ஆகிய படகுகளே இவ்வாறு தீயணைப்பு பணிகளில் களமிறங்கியுள்ளன.