
நாட்டில் 2,404 கர்ப்பிணி பெண்கள் கொவிட் தொற்றால் பாதிப்பு!
நாட்டில் முதலாவது கொரோனா அலை முதல் இன்று வரையான காலப்பகுதி வரை 2,404 கர்ப்பிணி பெண்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்தார்.