வெளிநாடு செல்பவர்களின் விபரங்களை கோரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

வெளிநாடு செல்பவர்களின் விபரங்களை கோரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தமது விபரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அந்தப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் ஊடாக வெளிநாடு சென்றபின்னர், ஏற்படும் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்குத் தீர்வு பெற்றுத்தர முடியுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவு செய்யாமல் தொழில்களுக்குச் சென்ற பலர் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

உரிய பதிவின்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.