வலையில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு
புலத்கொஹுபிட்டிய - இஹல உடுவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றில் வலையில் சிக்கிய சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.
சுமார் 5 வயதுடைய ஐந்தரை அடி நீளமுள்ள சிறுத்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புலத்கொஹுபிட்டிய வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கேகாலை நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர், பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
வலையை விரித்தவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினரும், வனவிலங்கு அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026