
அரிசி ஆலையில் தீ விபத்து : தெல்லிப்பழையில் சம்பவம்!
யாழ்ப்பாணம். தெல்லிப்பழை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
நேற்று மாலை (08) அரிசி ஆலை வேலைகள் நிறைவடைந்த பின்னர் உரிமையாளரால் பூட்டப்பட்டது.
இன்று காலை (09) 8 மணி அளவில் அரிசி ஆலையை திறக்கச் சென்றபோது அரிசி ஆலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததைக் கண்ட உரிமையாளர் அயலவர்களை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
இதன்போது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி ஆலை இயந்திரங்கள், ஏனைய உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் என்பன முற்றாக எரிந்து நாசமாகி உள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக அரிசி ஆலை உரிமையாளரால் தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.