தையிட்டி விகாரை காணி சுவீகரிப்பு முயற்சிக்கு எதிராக அணிதிரளுமாறு மக்களுக்கு அழைப்பு!!

தையிட்டி விகாரை காணி சுவீகரிப்பு முயற்சிக்கு எதிராக அணிதிரளுமாறு மக்களுக்கு அழைப்பு!!

யாழ்ப்பாணம் பலாலி தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் மேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் இதனைத் தடுத்து நிறுத்தி எமது மண்ணைப் பாதுகாக்க அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

“தையிட்டி பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற சட்டவிரோத விகாரைக் காணியை ஆக்கிரமிப்பதற்கு நில அளவைத் திணைக்களமும் அரச அதிகாரிகளும் வருகை தர இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் எங்ளுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறுமாக இருந்தால் நிரந்தரமாகவே அந்தக் காணிகள் சுவீகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுவிடும்.

தையிட்டி விகாரை காணி சுவீகரிப்பு முயற்சிக்கு எதிராக அணிதிரளுமாறு மக்களுக்கு அழைப்பு! | Against The Attempt To Acquire The Land Thaiyiddi

ஆகவே சட்டவிரோத விகாரைக் கட்டுமாணத்தை எதிர்த்தும் நில அளவைப் பணிகளை எதிர்த்தும் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை(12) தமிழ் மக்கள் அனைவரும் அங்கே திரண்டு தமது எதிர்ப்பை பலமாகக் காட்டி அளவீட்டு பணிகளை தடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயம் எழுந்திருக்கிறது.

எனவே தமிழ் மக்கள் அனைவரும் எமது கோரிக்கையை ஏற்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலையில் அந்த இடத்திற்கு அணிதிரள வேண்டும்.
 

எமது மண்ணை பாதுகாக்க அனைவரும் அணிதிரள வேண்டுமென அன்புரிமையோடு கேட்டு நிற்கிறோம்“ என்றார்.

Gallery