யாழில் நடுச்சாமத்தில் தோன்றிய உருவம்! பெரும் அச்சத்தை கிளப்பிய சம்பவம்..!

யாழில் நடுச்சாமத்தில் தோன்றிய உருவம்! பெரும் அச்சத்தை கிளப்பிய சம்பவம்..!

யாழ். அச்சுவேலியில் இறந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக இருந்து வருதாக தெரிவிக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இறந்த ஒருவரின் வீட்டிலேயே இவ்வாறான நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீட்டில் ஒவ்வொரு நாளும் மர்ம சத்தங்கள் கேட்பதும் வீட்டிற்குள் மண்ணை அள்ளித் தூவுவதும் ஜன்னல் கதவுகளை அடிப்பதும், புகை போன்ற உருவம் சத்தத்துடன் வருவதும் போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.

அதனை வீட்டின் உரிமையாளர் தனது தொலைபேசியில் நடுநிசி 1.00 மணியளவில் காணொளி எடுத்துள்ளார்.

யாழில் நடுச்சாமத்தில் தோன்றிய உருவம்! பெரும் அச்சத்தை கிளப்பிய சம்பவம்(படம்) | Movement Of Evil Spirits In Achchuveli Jaffna

எடுக்கப்பட்ட காணொளியில் ஆவி ஒன்று நாற்காலியை பல்வேறு கோணங்களில் சுழற்சியும் ஆட வைத்தும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சம்பவத்தை தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் தற்காலிகமாக வேறு வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.