14 இந்திய கடற்றொழிலாளர்கள் யாழில் கைது!!

14 இந்திய கடற்றொழிலாளர்கள் யாழில் கைது!!

இலங்கை - யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்றொழிலாளர்கள் இன்று (29.10.2023) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 14 இந்திய கடற்றொழிலாளர்களே இவ்வாறு யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் இரண்டு படகுகளுடன் கைதாகியுள்ளனர்.

14 இந்திய கடற்றொழிலாளர்கள் யாழில் கைது | 14 Indian Fishermen Arrested In Jaffna Sea

மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன் அங்கிருந்து அவர்கள் நீரியல்வள திணைக்களத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.