
பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது
சொகுசு வாகனங்கள் மற்றும் கெப் வண்டிகளை சந்தை விலையை விட குறைந்த விலையில் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் இரண்டரைக் கோடி ரூபாவை மோசடி செய்த நிலையிலே கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப்பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றியவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் போது சந்தேக நபரிடமிருந்து 71,500 ரூபா பணம், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், பல பிரபல கழகங்களின் அங்கத்துவ அட்டைகள் மற்றும் வங்கி அட்டைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.