ஹட்டனில் அதிக வேகம் காரணமாக பள்ளத்துக்குள் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து
கொழும்பில் இருந்து டிக்கோயா பகுதியினை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா அளுத்கல பகுதியில் வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன்
பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று காலை வேளையில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த முச்சக்கர வண்டி அதிகவேகம் காரணமாக வேகத்தினை கட்டுபடுத்த முடியாமையினால் விபத்து ஏற்பட்டதாகவும் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையென பொலிஸாரின் ஆரம்ப கட்ட
விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.