இளம் பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட மாகாண ஆளுநர் மகன்... தீவிர தேடுதலில் பொலிஸார்!

இளம் பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட மாகாண ஆளுநர் மகன்... தீவிர தேடுதலில் பொலிஸார்!

இளம் பெண்ணொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் ஊவா மாகாண ஆளுநர்  ஏ.ஜே.முஸம்மில் என்பவரின் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

மாகாண ஆளுநரின் மகன் கொழும்பு ஹெவ்லொக் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகின்றது.

இளம் பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட மாகாண ஆளுநர் மகன்... தீவிர தேடுதலில் பொலிஸார்! | Son Of Uva Province Governor Assaulted Young Woman

நேற்றையதினம் அதிகாலை ஜமால்தீன் குறித்த பெண்ணை தாக்கியதாகவும், காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வெள்ளவத்தை பொலிஸார், கொள்ளுப்பிட்டி மற்றும் கெப்பெட்டிபொல பிரதேசத்தில் உள்ள அவரது வீடுகளில் தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இளம் பெண்ணிடம் மோசமாக நடந்துகொண்ட மாகாண ஆளுநர் மகன்... தீவிர தேடுதலில் பொலிஸார்! | Son Of Uva Province Governor Assaulted Young Woman

இலங்கையின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளான குறித்த பெண் அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிதீமன்றத்தில் அறிவித்து ஜமால்தீனுக்கு எதிராக வெளிநாட்டு பயண தடையை பொலிஸார் பெற்றுள்ளனர்.