யாழில் பரசூட்டில் பறந்து சாகசம் காட்டிய விமானப்படை வீரர் விபத்து

யாழில் பரசூட்டில் பறந்து சாகசம் காட்டிய விமானப்படை வீரர் விபத்து

யாழ்ப்பாணத்தில் இலங்கை விமானப்படையின் கண்காட்சியில் பரசூட்டில் பறந்த விமானப்படை சாகச வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று முதல் நடைபெற்று வருகிறது.

இதன்போது சாகசத்தில் ஈடுபட்டபோதே விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானப்படை சாகச வீரருக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.