வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் அதிகரிக்கும் திருட்டுக்கள்..!

வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் அதிகரிக்கும் திருட்டுக்கள்..!

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் , வீட்டில் காணப்படும் பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டு செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 67 ஏக்கர் காணி அண்மையில் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட தமது காணிகளுக்குள் உடனே சென்று மீள் குடியேற முடியாத நிலையில் காணி உரிமையாளர்கள் சில நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்வதனால் , விடுவிக்கப்பட்ட தமது காணிகள் , வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு திரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் காணிகள் வீடுகளில் யாரும் இல்லாத நிலைமையை பயன்படுத்தி , திருடர்கள் அப்பகுதிகளுக்குள் புகுந்து , பயன்தரு மரங்களை வெட்டுவதுடன் , வீட்டில் காணப்படும் ஜன்னல் , கதவுகளின் நிலைகள் , இரும்புக்கம்பிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டுள்ளனர்.

வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் அதிகரிக்கும் திருட்டுக்கள் | Increase In Thefts Within Ceded Lands In The Northதிருடர்களிடம் இருந்து தமது வீடுகளையும் , காணிகளுக்குள் உள்ள பொருட்களையும் ஒரு சில வாரங்களுக்கு பாதுகாத்து தருமாறு இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரிடம் தாம் கோரிய போதிலும் , அவர்கள் திருடர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தாமதிப்பதாக காணி உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.