ஸ்ரீலங்காவில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 450 மாணவர்கள் ?

ஸ்ரீலங்காவில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 450 மாணவர்கள் ?

பொலநறுவை, கிரிதலேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கற்கும் 450 மாணவர்களும் 82 ஆசிரியர்களும் 7 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

குறித்த நோயாளியுடன் நெருங்கி செயற்பட்ட ஆசிரியர் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் இதுவரையில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த நாட்களில் பாடசாலைகளில் கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.