கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை உயர்வு, மேலும் 75 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை உயர்வு, மேலும் 75 பேர் குணமடைந்தனர்

நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,816 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு மேலும் 75 பேர் இன்று குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவர்கள் மொத்த எண்ணிக்கை 2514 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தொற்று உறுதியானவர்களில் 291 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவரும் அதேவேளை இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.