
நூற்றுக்கணக்கான கைதிகளுக்கு பொது மன்னிப்பு
வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்படும் கைதிகளில் நான்கு பெண் கைதிகளும் அடங்குவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெசாக் போயா தினத்தை முன்னிட்டு, சிறை கைதிகள் மே 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் பார்வையாளர்களைச் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாய்ப்பு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிடைக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.