
மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும்..! வலியுறுத்தும் அரசியல் கட்சி
மாகாண சபைத் தேர்தலையும் விரைவில் நடத்துமாறு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் மகிந்த அமரவீர(Mahinda Amaraweera), அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கதிரைச் சின்னத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது எனவும், மாகாண சபைத் தேர்தலின்போது சிறப்பான வெற்றி கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் எதிரணிகள் செயற்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.