வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் அதிகரிப்பு

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ஜனவரி முதல் ஏப்ரல் மாத காலப்பகுதியில் இலங்கைக்கான வெளிநாட்டு பணவனுப்பல் 18.3 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 2,460.5 மில்லியன் அமெரிக்க டொலராக வெளிநாட்டு பணவனுப்பல் பதிவாகியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் அதிகரிப்பு | Money Sent To Sri Lanka From Abroad Rises

அதிகாரபூர்வ புள்ளி விவரங்களின் படி, ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் 646.1 மில்லியன் டொலராக பதிவாகியிருந்தது.

எனினும்,இது கடந்த மார்ச் மாதத்தில் பதிவான 693.3 மில்லியன் அமெரிக்க டொலரை விடவும் குறைவாகும் என இலங்கை மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.