தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் குறித்து வெளியான தகவல்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் குறித்து வெளியான தகவல்

கடந்த சில வாரங்களை ஒப்பிடும்போது தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இலங்கையில் கடந்த 3 வாரங்களில் தங்கத்தின் விலையானது இருபதாயிரம் ரூபாவை விட அதிகமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம், கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்கா தனது அனைத்து வர்த்தக கூட்டாளிகள் மீதும் விதித்த பரஸ்பர வரிகள் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதனடிப்படையில் ஏப்ரல் 22 அன்று, உள்ளூர் தங்கத்தின் விலைகள் 24 மணி நேரத்திற்குள் சுமார் 17000 ரூபா அதிகரிப்பை பதிவு செய்து வரலாற்று உச்சத்தை எட்டியது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் குறித்து வெளியான தகவல் | Gold One Pawn Rate Pawning Rate

24 கரட் 1 பவுண் தங்கத்தின் விலை ரூ. 275,000 - 277,000 ஆகவும், 22 கரட் 1 பவுண் தங்கத்தின் விலை ரூ. 252,000 - 254,000 ஆகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.29875, 1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ. 239000, 1 கிராம் தங்கம் (24 கரட்) - ரூ.32375, 1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.259000 என்பது குறிப்பிடத்தக்கது.