கையூட்டல் பெற முற்பட்ட காவல்நிலைய பொறுப்பதிகாரி யாழ். சிறைச்சாலையில்

கையூட்டல் பெற முற்பட்ட காவல்நிலைய பொறுப்பதிகாரி யாழ். சிறைச்சாலையில்

வவுனியா - பூவரசங்குளம் காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு 27ஆம் திகதி வரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

5 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற முற்பட்ட குற்றச்சாட்டிலே காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று வவுனியா நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானிடம் இருந்து உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.

கையூட்டல் பெற முற்பட்ட காவல்நிலைய பொறுப்பதிகாரி யாழ். சிறைச்சாலையில் | Police Station Officer Arrested Attempting Accept

வவுனியா - பூவரசங்குளம் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி, செட்டிக்குளம் பகுதியில் உள்ள நபரொருவர் வழங்கிய தகவலுக்கமைய நேற்று கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு 27ஆம் திகதி வரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு 27ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த நபரால் கொள்வனவு செய்யப்பட்ட காணி சம்பந்தமான பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்காக சந்தேகநபரான காவல்துறை அதிகாரி குறித்த தொகையை கையூட்டலாகக் கோரியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.