கிழக்கு பல்கலையில் மாணவியை கன்னத்தில் அறைந்த மாணவனுக்கு நேர்ந்த கதி

கிழக்கு பல்கலையில் மாணவியை கன்னத்தில் அறைந்த மாணவனுக்கு நேர்ந்த கதி

மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக (Eastern University) மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பல்கலை மாணவன் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் சிங்கள மாணவர்களுக்கிடையே புதிதாக பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களை பகிடிவதை தொடர்பாக வாக்குவாதம் இடம்பெற்றது.

இதன்போது மாணவி ஒருவர் பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்ததை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த மாணவியின் கன்னத்தில் சக மாணவன் ஒருவர் தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கிழக்கு பல்கலையில் மாணவியை கன்னத்தில் அறைந்த மாணவனுக்கு நேர்ந்த கதி | Clashes Between Students At Eastern University

இதனையடுத்து மாணவியை தாக்கிய சக மாணவனை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர்.  

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.