
CIDயிடம் சிக்கிய குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெளிவுப்படுத்தியுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான டுபாயில் உள்ளதாகக் குறிப்பிடப்படும் 'கெஹெல்பத்தர பத்மே'வுக்கு 3 போலி கடவுச்சீட்டுகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே அந்தத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.