யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் பெரும் திருவிழா காளாஞ்சி கையளிப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் பெரும் திருவிழா காளாஞ்சி கையளிப்பு

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

கொடியேற்றத்துடன் தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் பெரும் திருவிழா காளாஞ்சி கையளிப்பு | 2025 Jaffna Nallur Kandan Festival Kalanchee

இந்நிலையில் யாழ். மாநகர சபையினருக்கு , நல்லூர் கந்தன் பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் (27) பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி  கையளிக்கப்பட்டது.

நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் யாழ். மாநகர சபை ஈடுபடும்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் பெரும் திருவிழா காளாஞ்சி கையளிப்பு | 2025 Jaffna Nallur Kandan Festival Kalanchee

நல்லூர் கந்தன் திருழிவிற்கான காளாஞ்சி நிகழ்வு பாரம்பரிய முறைப்படி பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.