தமிழர் பகுதியில் வாள் வெட்டு : சம்பவ இடத்திலே பலியான இளைஞன்

தமிழர் பகுதியில் வாள் வெட்டு : சம்பவ இடத்திலே பலியான இளைஞன்

கிளிநொச்சி (Kilinochchi)  - பூநகரி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் நேற்று (31.05.2025) மாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பூநகரி தம்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன் மீது அடையாளம் தெரியாதவர்களால் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியில் வாள் வெட்டு : சம்பவ இடத்திலே பலியான இளைஞன் | Youth Stabbed With Sword In Kilinochchi

உயிரிழந்தவர் 28 வயதுடைய கந்தசாமி பிரணவன் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பிரேதபரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூநகரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.