கொட்டித் தீர்க்கும் மழை: கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

கொட்டித் தீர்க்கும் மழை: கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறந்துவிடப்பட்டுள்ளது.

மலையகப் பிரதேசங்களுக்கு பெய்து வரும் கடும் மழைகாரணமாக அதிகளவு நீர் பாய்வதன் காரணமாக மேற்படி வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.

கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு | Opening Of The Sluice Gate Kotmale Reservoirஅதேநேரம் நுவரெலியாப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வான்கதவுகள் சுயமாக திறக்கப் படலாம்.

அச்சமயங்களில் மேற்படி நீர்த்தேக்கத்தின் கீழ் வசிப்பவர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என மகாவலி அபிவிருத்தி அதிகார சபைப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.