வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அதிர்ச்சி

வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அதிர்ச்சி

ஹப்புத்தளையில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஹப்புத்தளை கெல்பன் தோட்டம் பகுதியை சேர்ந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி காரணமாக தியத்தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுமியை பரிசோதித்த பிறகு, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை பொலிஸார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் 52 வயதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அதிர்ச்சி | 14 Year Old Girl Is A Pregnant Man Arrested

ஹப்புத்தளை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று பண்டாரவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.