கம்பளை பிரதேசத்தில் 19 பேரின் சடலங்கள் மீட்பு
கண்டி, கம்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 19 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், 44 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும், ஏனைய அனைத்து மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், யாரும் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.