3 மாத குழந்தை உட்பட 05 பேருக்கு நடந்த சோகம் ; பலர் மாயம்
குருநாகல், மெல்சிரிபுர - கந்துமல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 3 மாத குழந்தை உட்பட 05 பேர் உயிரிழந்துள்ளதோடு, 09 பேர் காணாமல் போயுள்ளனர்.
நேற்று (29) மாலை வரை பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கை கடினமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.