உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, பொறிமுறைகள் தொழிநுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல், 15 ஆம் திகதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல் | Announcement Of The Date Gce Al Examination

நாட்டியம் (தேசிய), நாட்டியம் (பரதம்), சங்கீதம் (கீழைத்தேய), சங்கீதம் (மேலைத்தேய), நாடகமும் அரங்கியலும் (சிங்களம்), நாடகமும் அரங்கியலும் (தமிழ்), நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்) ஆகிய பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக விபரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தை முழுமையாக பார்வையிடவும் வழங்கப்பட்டுள்ளது.

Gallery