ஆசிரியர் சேவையில் இணைய காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டிப்பரீட்சைக்கு முன்நிபந்தனையான பட்டப்படிப்புத் தகுதியை நிறைவு செய்வதற்கான காலவகாசம் திருத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை பட்டப்படிப்பை நிறைவு செய்த 40 வயதுக்குட்பட்டவர்கள் தற்போது தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாகியுள்ளனர்.
இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னர் வெளியான வர்த்தமானியின் கீழ், 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் அரச சேவையில் பணியாற்றி, முறையான அனுமதியுடன் பதவி விலகிய நபர்களும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதிக்கு முன் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தால், விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என புதிய வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.