56 ஆண்டு கால பழமையான இலங்கை மின்சார சபை கலைப்பு

56 ஆண்டு கால பழமையான இலங்கை மின்சார சபை கலைப்பு

56 ஆண்டு காலப் பழமையான இலங்கை மின்சார சபை நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நாட்டின் மின்சக்தித் துறையில் 1969 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இயங்கி வந்த மின்சார சபை, இனி மின் உற்பத்தி, மின் விநியோகம், கடத்துகை மற்றும் கட்டமைப்பு இயக்கம் என ஆறு தனித்தனி நிறுவனங்களாகச் செயற்படும்.

56 ஆண்டு கால பழமையான இலங்கை மின்சார சபை கலைப்பு | Dissolution 56 Year Old Ceylon Electricity Board2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் எஞ்சிய விதிகள் இதன் மூலம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

விருப்ப ஓய்வு திட்டத்தைத் தெரிவு செய்யாத ஊழியர்கள் அனைவரும் இந்தப் புதிய ஆறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை முதல் வழங்கப்படவுள்ளன.