சிறகுகள் அமையத்தால் மேற்கொள்ளப்பட்ட பண்ணை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி.

சிறகுகள் அமையத்தால் மேற்கொள்ளப்பட்ட பண்ணை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி.

மாற்றம் எம்மில் இருந்து ஆரம்பிக்கட்டும்.

சிறகுகள் அமையத்தால் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பண்ணை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நேற்றைய தினம் (09.08.2020) காலை வேளை இடம்பெற்றது. சேகரிக்கப்பட்ட கழிவுகள் அனைத்தும் யாழ் மாநகர சபை மீள்சுழற்சி நிலையத்தில் கையளிக்கப்பட்டது.

இப்பணியின் போது வீதியால் சென்ற ஒரு இனம் தெரியாத நபர் ஒருவர்  இணைந்து தனது பங்களிப்பையும் வழங்கி இருந்தது ஒரு பாராட்டவேண்டிய விடயமாகும்.
எதிர்வரும் காலங்களில் வேறு பல அமைப்புக்கள் , கழகங்கள் உடன் சேர்ந்து இப்பணியை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். ஆகவே இப்பணியில் இணைந்து செயற்றப்பட விரும்புபவர்கள் ஞாயிற்றுகிழமைகளில் பண்ணை கடற்கரையில் எம்முடன் இணையவும்.

சிறகுகள் அமையம்