அரிசி விலையில் மாற்றமா...! வெளியான அதிரடி அறிவிப்பு
அரசாங்கத்திடம் மூன்று மாதங்களுக்குத் தேவையான அளவு அரிசி கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அரிசியின் விலை அதிகரிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.