யாழில் பொலிஸார் மீது கடும் தாக்குதல் மேற்கொண்ட மர்மக்கும்பல்!

யாழில் பொலிஸார் மீது கடும் தாக்குதல் மேற்கொண்ட மர்மக்கும்பல்!

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய சென்ற கோப்பாய் பொலிஸார் மீது இனம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு பொலிசார் காயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஊரெழு போயிட்டி பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவரை கைது செய்வதற்காக மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு பொலிசார் சென்றுள்ளனர்.

பொலிஸார் அப்பகுதிக்கு சென்று சந்தேக நபரை தேடிய போது அங்கு இரு தரப்புக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த முரண்பாடு தொடர்பில் விசாரிக்க சென்ற பொலிசார் மீது அங்கு நின்ற இளைஞர் குழு கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் இரு பொலிசார் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.