
நல்லூரில் சங்கிலிகள் மற்றும் தாலிக்கொடி அறுத்த அறுவர் சிக்கினர்
நல்லூர் கந்தனின் வருடாந்த இரதோற்சவம் நேற்று இடம்பெற்ற நிலையில் சனநெரிசலைப் பயன்படுத்தி தங்கச்சங்கிலிகள் மற்றும் தாலிக்கொடி அறுத்த ஆறுபேர் வசமாக பிடிபட்டனர். .
இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தாலிக்கொடியொன்றும், 6 தங்கச்சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரகள், திருகோணமலை, மட்டக்களப்பு, செங்கலடி, கல்லடி பகுதிகளை சேர்ந்தவர்கள் என யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.