
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 617 பேருக்கு கொரோனா: 15 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 617 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுகாதார அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 617 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2,89,832 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனடிப்படையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 6,190 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பெற்று, இதுவரை 2,70,009 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 759 பேர் உள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.