நிராகரிக்கப்பட்ட தமிழ் பட்டதாரிகளுக்காக நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் டக்ளஸ்

நிராகரிக்கப்பட்ட தமிழ் பட்டதாரிகளுக்காக நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் டக்ளஸ்

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வடமாகாண அரச நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையிலான விஷேட கலந்துரையாடலொன்று விரைவில் இடம்பெறவுள்ளதாக வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ம. ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான விசேட கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ம. ஆனந்தராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்விடம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச நியமனம் நிராகரிக்கப்பட்ட காரணங்களுக்கு அப்பால் அரச நியமனங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அனைத்துப் பட்டதாரிகளும் தார்மீக ரீதியிலான வேண்டுகோள் ஒன்றை கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்குடன் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு தடைகள் தாமதங்களுக்கு மத்தியில் இக் கலந்துரையாடல் வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனூடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் அரச நியமனம் நிராகரிக்கப்பட்ட அனைத்துப்பட்டதாரிகளையும் எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை றோயல் விருந்தினர் விடுதியில் அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள விஷேட கலந்துரையாடலில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ம. ஆனந்தராஜா தெரிவித்துள்ளதுடன் மேலதிக தகவல்களை 0777425286 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுமாறு மேலும் தெரிவித்துள்ளார்.