யாழில் வெடி பொருட்கள்! ஸ்தலத்திற்கு விரைந்தது செயலிழக்கும் படை
மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி வடக்கில் காணி ஒன்றை துப்பரவு செய்த பொழுது வெடி பொருட்கள் தென்பட்டுள்ளதாக பலாலி பொலிஸாா் தொிவித்துள்ளனா்.
காணி உாிமையாளா் கனரக வாகனத்தின் உதவியுடன் துப்பரவு பணியில் ஈடுபட்ட போது மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் இவை காணப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படை வெடிபொருட்களை செயலிழக்கும் நடவடிக்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸாா் தொிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.