தேசிய ரீதியில் பின்னடைவு! கவலை வெளியிட்டுள்ள வடக்கு ஆளுநர்

தேசிய ரீதியில் பின்னடைவு! கவலை வெளியிட்டுள்ள வடக்கு ஆளுநர்

வடக்கில் மாணவர்களின் பெறுபேறுகளில் காணப்படும் பின்னடைவு தேசிய ரீதியில் கடைசி தரத்தில் இருக்கிறது என வடமாகாண ஆளுநர் பி.எஸ் .எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

முள்ளியளை வித்தியானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்ட கலைக்கூட கட்டட தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கல்வி சம்பந்தமான பாரிய சவால்களுக்கு வடமாகாணம் முகம் கொடுத்து வருகின்றது.

ஒப்பீட்டளவில் இலங்கையில் எந்த மாகாணத்தினை பார்த்தாலும், வடமாகாணத்தில் இருக்கின்ற பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விட குறைந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் தான் இருக்கின்றன.

தேசிய ரீதியில் 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருக்கும் போது வடமாகாணத்தில் 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று ஆசிரியர்களின் வளப்பகிர்வு இருக்கின்றது.

இருப்பினும் மாணவர்களின் பெறுபேறுகளில் காணப்படும் பின்னடைவு தேசிய ரீதியில் கடைசி தரத்தில் இருக்கின்றதென அவர் தெரிவித்துள்ளார்.