வரணியில் வாள்வெட்டு தாக்குதல்

வரணியில் வாள்வெட்டு தாக்குதல்

வரணியில் இளைஞன் ஒருவனைக் கடத்தி நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் (25) மாலை வரணி இயற்றாலையில் இடம்பெற்றுள்ளது.

வேலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் வந்து சுட்டிபுரம் பகுதியில் இறங்கும் போது அங்கு நின்றிருந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று குறித்த இளைஞனை கடத்திச் சென்று வாளால் வெட்டி படுகாயப்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளது.