
யாழ்.பல்கலைக்கழகத்தில் தீடீர்போராட்டம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் சங்கத்தினரால் பாதுகாப்பு உத்தியோகத்தர் கூட்டுறவு தொழிற்சங்கத்துக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
கொரோனா காலத்தில் இடம்பெற்ற களவுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தொழிற்சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களுக்கு எதிராக தொழிற்சங்கம் செய்யப்பட்டமைக்கும் எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
"தொழிற்சங்கம் மன்னிப்புக் கோரவேண்டும் அல்லது நிரூபிக்க வேண்டும்"
"தனிநபர் பிரச்சினைகளுக்கு சுயாதீன விசாரணை வேண்டும்"
"எதிர்கால சந்ததியின் சொத்தை சீரழிக்க விடாதே" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் தொங்கவிடப்பட்டு எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனினும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவோரை தவிர ஏனைய அனைவரும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.