வடமராட்சி கடற்பரப்பில் பதற்றம் -கைப்பற்றப்பட்ட படகுகள்- தப்பியோடிய புத்தளம் மீனவர்கள்

வடமராட்சி கடற்பரப்பில் பதற்றம் -கைப்பற்றப்பட்ட படகுகள்- தப்பியோடிய புத்தளம் மீனவர்கள்

வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்கு புறம்பான வகையில் கடற்றொழிலில் ஈடுபட்ட புத்தளத்தைச் சேர்ந்தவர்களது மூன்று படகுகளை உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

படகுகளைக் கைப்பற்றியவேளை சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டவர்கள் படகுகளை கரையில் கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

நாகர் கோவில் கடற்பரப்பில்  இரவு இந்த சம்பவம் இடம்பெற்றது.

வடமராட்சிகிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் புத்தளத்திலிருந்து வருகை தந்த மீனவர்கள் தொழிலி் ஈடுபடுவதாக அண்மைக்காலமாக குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வாறு தொழிலில் ஈடுபட்ட புத்தளத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொழிலுக்கு சென்று கரையேறியபோது அங்கு கூடிய உள்ளூர் மீனவர்கள் அந்தப்படகுகளை அதிகாரிகளின் உதவியுடன் தடுக்க முயன்றனர்.இதன்போது படகுகளில் இருந்தவர்கள் தப்பி ஓடியபோதிலும் மூன்று படகுகளும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

படகு ஒன்றில் சுருக்கு வலை ஒன்று கைப்பற்றப்பட்டது.கைப்பற்றப்பட்ட படகுகளை நீதிமன்றில் பாரப்படுத்தும் நடவடிக்கைகளை யாழ்.மாவட்ட நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.